ஆறு வருடங்களுக்கு பின்பு பாரிஸ் (Paris) நகருக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த ஶ்ரீலங்கன் விமான சேவை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆறு வருடங்களுக்கு பின்பு பாரிஸ் (Paris) நகருக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த ஶ்ரீலங்கன் விமான சேவை!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆறு வருடங்களின் பின்னர் பிரான்ஸ் பாரிஸ் நகருக்கு தனது நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

UL 564 என்ற முதலாவது விமானம் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.

பிரான்சில் இருந்து மொத்தம் 200 பயணிகளுடன் விமானம் இலங்கை வந்தடைந்தது.

கொழும்பில் இருந்து பாரிஸ் செல்லும் ஆரம்ப விமானம் ஒக்டோபர் 30 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டு 31 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பிரான்ஸ் சென்றடைந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

பாரிஸ் நகரை வந்தடைந்தவுடன், சுற்றுலா மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே தலைமையிலான இலங்கை தூதுக்குழுவை பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்துடன் பாரிஸில் உள்ள இலங்கை சமூகம் வரவேற்றது.

கட்டுநாயக்க மற்றும் பாரிஸ் சார்ஸ் டி கா (Paris Charles de Gaulle) விமான நிலையத்திற்கு இடையில் இன்று முதல் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை இயக்கும் என ஶ்ரீலங்கன் தேசிய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என்று விமான நிறுவனங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.