டிசம்பரில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா பரவும் அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேராவும் டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்றுகள் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன், குறிப்பாக சுற்றுலாப் பயணங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது, தங்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை எடுத்துச் செல்லுமாறு அரசு மருத்துவமனைகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. (யாழ் நியூஸ்)
இலங்கையில் கொரோனா பரவும் அச்சுறுத்தல் இன்னும் தொடர்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேராவும் டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்றுகள் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன், குறிப்பாக சுற்றுலாப் பயணங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லும் போது, தங்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை எடுத்துச் செல்லுமாறு அரசு மருத்துவமனைகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. (யாழ் நியூஸ்)