580 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

580 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம்!


580 வருடங்களுக்கு பிறகு இன்று (19) பகுதி நேர சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதாகும். இந்த நிகழ்வு பௌர்ணமி அன்று ஏற்படும். சூரியனின் ஒளி சந்திரன் மீது முழுவதுமாக விழுந்தால் அது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். சந்திரனின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதிநேர சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும்.

இந்நிலையில், இன்று பகுதி நேர சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம் 580 வருடங்களுக்கு பின்னர் நிகழவுள்ளது. இலங்கை நேரப்படி, பகுதி நேர சந்திர கிரகணம் காலை 11:32:09 மணிக்கு துவங்கி மாலை 05:33:40 மணிக்கு முடிவடையவுள்ளது. முழுமையாக 6 மணி நேரம் 2 நிமிடங்கள் இந்த கிரகணம் நிகழும். 

இதற்கு முன் மிக நீண்ட சந்திர கிரகணம் 1440 ஆம் ஆண்டு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் பிறகு மீண்டும் இது போன்ற சந்திர கிரகணம் 2669 ஆம் ஆண்டு தான் நிகழ வாய்ப்புள்ளது. 

மேலும், இன்று நிகழவிருக்கும் இந்த சந்திர கிரகணம் ஆசியாவில் உள்ள சில பகுதிகளிலும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் தெரியும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.