கடும் மழையுடனான வானிலையை அடுத்து, கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.
இதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை (28) அதிகாலை 6.00 மணி வரை இந்த வீதி மூடப்பட்டுள்ளது. பஹல கடுகண்ணாவ ஊடாக கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கேகாலை - அவிசாவளை பிரதான வீதியின் கலிகமுவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால், குறித்த வீதியூடாகப் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.