விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு தாம் இணங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தெரிவிக்கையில் அவர், பெண்ணொருவருக்கு தனது உடலைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை அவருக்கே உள்ளது என்றும், எந்தத் தொழிலுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் டயானா கமகே ஆகியோரும் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என தெரிவித்தனர்.