குறிஞ்சாக்கேணி விபத்து; கைது செய்யப்பட்ட மூவருக்கும் விளக்கமறியலில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குறிஞ்சாக்கேணி விபத்து; கைது செய்யப்பட்ட மூவருக்கும் விளக்கமறியலில்!


கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த படகின் உரிமையாளர் உட்பட அதனை இயக்கிய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


குறித்த மூவரையும் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறிஞ்சாக்கேணியில் நேற்று (23) குறித்த இழுவைப் படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 04 சிறுவர்கள் உட்பட 06 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் சம்பவம் குறித்து முன்னெடுத்த விசாரணைகளையடுத்து கிண்ணயா பொலிஸாரால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரால் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.