நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸை விரைவில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மேலும் திகதி மற்றும் ஏனைய விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸாக ஃபைசர் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருமணங்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளை கடுமையான சுகாதார விதிமுறைகளின் கீழ் நடத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அதிகாரிகளை சந்திக்கும் போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். (யாழ் நியூஸ்)