கொரோனா தொற்று காரணமாக நேற்று (25) 26 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஒருவர், 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 3 பேர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 22 பேர் அடங்குவர்.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,258 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)