இரத்தினபுரி - பலாங்கொடையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு நபருக்கு ஐந்து லீற்றர் வரை மட்டுப்படுத்தப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலில் ஒருவருக்கு 05 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒருவருக்கு 10 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட நிலையில் அது மீண்டும் ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (யாழ் நியூஸ்)