சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் பொதுமக்களின் போராட்டங்களால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சுகாதார வழிகாட்டுதல்கள் சரியான முறையில் பின்பற்றப் படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் ஒரே நாளில் அதிகளவானோருக்கு கொரோனோ தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.