அடுத்த ஒரு மாதத்திற்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது 23,000 டெங்கு நோயாளர்கள் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிலவும் டெங்கு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)