தற்போதைய அரசாங்கம் நகைச்சுவையாக மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இரசாயன உரம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தினால் நாட்டில் விரைவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.
மக்கள் சக்தியால் பாராளுமன்றத்திற்கு வந்த பசில் ராஜபக்ச அல்லது ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் தாம் பயப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையவழி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)