கொழும்பில் காணாமல் போயுள்ள சிறுமிகள் தொடர்பில் பொலிஸார் அதிரடி தேடுதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் காணாமல் போயுள்ள சிறுமிகள் தொடர்பில் பொலிஸார் அதிரடி தேடுதல்!



கொழும்பு - புதுக்கடை பகுதியில் வைத்து மூன்று சிறுமிகள், நேற்று (08) காலை முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளையும் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.


13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.


அதில் இரண்டு சகோதரிகள் கொழும்பைச் சேர்ந்தவர்கள், மற்றைய ஒருவர் அவர்களது உறவின சகோதரி கம்பளையைச் சேர்ந்தவர். குறித்த கம்பளை சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இங்கு குடும்ப திருமணமொன்றில் கலந்து கொள்வதற்காக கொழும்பு வந்துள்ளார். போலீசார் ஏற்கனவே ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் அனைத்து அறிவுறுத்தல்களையும் பெற்றுள்ளனர்.


இதேவேளை, இந்த மூன்று சிறுமிகளையும் திங்கட்கிழமை இரவு 8.10க்கும், 9.30 மணிக்கும் இடையில், இராஜகிரிய பிரதேசத்தில் கண்டதாக அச்சிறுமிகளின் குடும்ப உறுப்பினரென தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.