ஒன்றினைந்த அதிபர் ஆசிரியர் போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒன்றினைந்த அதிபர் ஆசிரியர் போராட்டம்!


தேசிய மட்டதிதில் இன்று (09) ஒழுங்குபடுத்தப்பட்ட இப்போராட்டமானது மட்டக்களப்பு வாழைச்சேனை – ஓட்டமாவடிச் சந்தியில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்க, இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டு கல்குடா வலய பாடசாலை அதிபர்களினதும் ஆசிரியர்களினதும் முழுமையான பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

பங்குபற்றிய அதிபர் ஆசிரியர்கள் “பிள்ளைகளின் கல்வியை வியாபாரமாக்காதே”, “அதிபர் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதே” போன்ற வாசகங்களையும் தாங்கி கோஷமிட்டனர்.

மேலும் இப்போராட்டம் எங்களுக்கானது மட்டுமல்ல எங்கள் வருங்கால சந்ததியினருக்கும்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொண்டு எமக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதோடு வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த ஒரு சுபோதினி திட்டம் முன்மொழியப்படவேண்டும் எனவும் அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.