ஆசிரியர் - அதிபர்கள் போராட்டத்தில் 27 வயது ஆசிரியை மயங்கி விழுந்து பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர் - அதிபர்கள் போராட்டத்தில் 27 வயது ஆசிரியை மயங்கி விழுந்து பலி!


இன்று (09) ஆசிரியர் - அதிபர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.


மாத்தறை, கொட்டபொல தேசிய கல்லூரிக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.


பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


உயிரிழந்தவர் தெனியாய மத்திய கல்லூரியின் 27 வயதுடைய ஆசிரியை எனவும், இவர் முன்னர் இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.


மேலும் அவர் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.