வாகன சாரதிகள் தண்டப்பணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன சாரதிகள் தண்டப்பணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு!


வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணக் காலம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.


அதன்படி, 2021.10.31 ஆம் திகதி தொடக்கம் பெறப்பட்ட வாகன அபராத பற்றுச்சீட்டிற்கு நவம்பர் மாதம் 14ஆம் திகதி வரை மேலதிக தண்டப்பணம் அறவிடப்படாது எனவும், அதன்பின் 28 நாட்கள் வரையிலான வாகன அபராத பற்றுச்சீட்டிற்கு மேலதிக தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.


அதேபோல், நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பெறப்பட்ட வாகன அபராத பற்றுச்சீட்டு வழமைப் போல 14 நாட்கள் கணக்கிடப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படும் எனவும், 28 நாட்கள் வரையிலான வாகன அபராத பற்றுச்சீட்டிற்கு மேலதிக தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் மற்றும் 28 நாட்களை கடந்த வாகன அபராத பற்றுச்சீட்டு ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.