இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது கட்டாய மாற்ற விதிக்கு உட்பட்டதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது கட்டாய மாற்ற விதிக்கு உட்பட்டதா?


ஏற்றுமதி வருமானத்தை கட்டாயமாக மாற்றுவது தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் விதிக்கு, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்படுதல் உட்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இன்று (09) உறுதிப்படுத்தினார்.


தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்ட விடயத்தை பதிவிட்ட அவர், அவ்வாறு அனுப்பப்படும் பணம் சேவை ஏற்றுமதியாக கருதப்படாது எனவும் விளக்கமளித்துள்ளார்.


தற்போதைய பரிவர்த்தனைகள், அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணியில் மீள வாங்குதல், கடன் சேவைச் செலவுகள், பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குதல் மற்றும் இலங்கை அபிவிருத்திப் பத்திரங்களில் முதலீடுகள் ஏற்றுமதி வருமானத்தை ரூபாயாக மாற்றுவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதியின் கீழ் மத்திய வங்கியின் மூலம் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுகிறது. 


ஏற்றுமதி வருமானம் மத்திய வங்கி வழங்கிய 25% கட்டாய மாற்ற விதிக்கு உட்பட்டது அல்ல என்றும் மாறாக, அனுமதிக்கப்பட்ட பற்று அனுமதிக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள தொகையை ரூபாயாக மாற்ற வேண்டும் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.