தடுப்பூசி அட்டை உபயோகித்து மாகாணத்தை கடக்க முடியும்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசி அட்டை உபயோகித்து மாகாணத்தை கடக்க முடியும்?


மாகாணங்களுக்கிடையில் பயணிக்கும் போது, ​​தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என, ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, அரசாங்கத்துக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.


ஹோட்டல்கள் மற்றும் நெரிசலான இடங்களுக்குச் செல்லும் நபர்களின் தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் சரிபார்த்து, அவர்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் 

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், இந்த வழிமுறையை செயற்படுத்தி வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளன என்றார்.


இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை மேற்கொள்வதன் மூலம், மாகாணத்திலிருந்து மாகாணத்துக்கு தொற்று பரவுவதைக் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும், குறிப்பாக இளைய தலைமுறையினர் தடுப்பூசி போடுவதற்கு இது உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

 

அதேவேளை, கொரோனா வைரஸின் புதிய திரிபுகள் நாட்டில் தொடர்ந்து வெளிப்படும் என்று கூறிய பேராசிரியர், தடுப்பூசி மற்றும் அடிப்படை சுகாதார விதிகளை தொடர்ந்து பின்பற்றுவதே புதிய திரிபுகளிலிருந்து விடுபட ஒரே வழி என்று சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.