கருப்புப் பணமாற்றம் - மத்திய வங்கி விடுத்த அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கருப்புப் பணமாற்றம் - மத்திய வங்கி விடுத்த அதிரடி அறிவிப்பு!

இலங்கையில் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் வரும் பணம் குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும், நடைமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சட்டப்பூர்வமான வழிகள் உள்ளன என்று கூறிய கப்ரால், இதற்காக முறையான முறைமைகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.

உத்தியோகபூர்வ வழிகளில் இருந்து பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் ஓய்வூதியம் போன்ற கூடுதல் சலுகைகளை வழங்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார். 

இவற்றில் ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் உள்ளடங்குவதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே ரூ. 2 மேலதக கொடுப்பனவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.