நடிகர் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த ஐவர் ஒரே விபத்தில் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடிகர் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த ஐவர் ஒரே விபத்தில் பலி!


பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற வீதி விபத்தில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் உயிரிழந்தனர்.


மூத்த ஹரியானா காவல்துறை அதிகாரி ஓ.பி.சிங்கின் சகோதரி கீதா தேவி மரணமடைந்த நிலையில், அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்ப உறுப்பினர்கள் பாட்னாவிலிருந்து சென்று கொண்டிருந்தனர். ஓ.பி.சிங்கின் மைத்துனர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகும்.


கடந்த 2020ஆம் ஆண்டு, ஜூன் 14ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் சுஷாந்த் சிங் உயிரிழந்தது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இவர் தோனியின் பயோபிக் திரைப்படத்தில் நடித்து நாடு முழுக்க புகழ் பெற்ற நடிகராகும். பல கோணங்களில் அந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், சுஷாந்த் சிங் ராஜ்புத் குடும்பத்தில் மற்றொரு சோகம் அரங்கேறியுள்ளது. ஹல்சி காவல் நிலையத்தின் கீழ் உள்ள பிப்ராவில் நடுநிலைப் பள்ளி அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது.


இதுபற்றி லக்கிசராய் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுஷில் குமார், தெரிவிக்கையில்,


"ஒரு லாரியும் டாடா சுமோவும் மோதியதில் 06 பேர் கொல்லப்பட்டனர். சுமோவில் சென்றவர்கள் பாட்னாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். காயமடைந்த நான்கு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார்.


காயமடைந்தவர்களில் இருவர் பால்முகுந்த் சிங் மற்றும் தில் குஷ் சிங் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக, பாட்னாவுக்கு அனுப்பப்பட்டனர், பால்மிகி சிங் மற்றும் டோனு சிங் ஆகியோர் லக்கிசராய் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக லக்கிசராய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இறந்தவர்கள் லால்ஜித் சிங் (ஓ.பி. சிங்கின் மைத்துனர்), அவரது இரண்டு மகன்கள் அமித் சேகர் என்ற நெமனி சிங் மற்றும் ராம் சந்திர சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பேபி தேவி, அனிதா தேவி மற்றும் டிரைவர் பிரீதம் குமார் என அடையாளம் காணப்பட்டனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நெருங்கிய குடும்பத்தினர் இல்லை என்றபோதிலும், உயிரிழந்தவர்கள், அவரது குடும்ப உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


-இந்திய ஊடகம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.