பிக்கு ஒருவரை தாக்கிய மாணவர்கள் மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிக்கு ஒருவரை தாக்கிய மாணவர்கள் மூவர் கைது!


அநுராதபுரத்தில் பிக்கு ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்று (15) அனுராதபுரம் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் மகன் உட்பட மூவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய 3 மாணவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.


யாழ். கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகன், இராணுவ அதிகாரி ஒருவரின் மகன் உள்ளிட்ட 03 மாணவர்களே கைது செய்யப்பட்டனர்.


கடந்த 12ஆம் திகதி மாலை விகாரை வளாகத்திலிருந்த கட்டிடமொன்றின் பின்புறமிருந்து 3 மாணவர்களும் மது அருந்திக் கொண்டிருந்ததுடன், அது தொடர்பில் வினவிய போது பிக்கு தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.


தாக்குதலுக்கு உள்ளான பிக்கு, அனுராதபுரத்திலுள்ள தேசிய பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியராவார்.


மூன்று மாணவர்கள் தாக்கியதில் பிக்குவின் மூக்கு உடைந்து இரத்தம் சொட்டியதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.