சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிய மற்றுமொரு நாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிய மற்றுமொரு நாடு!

கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இலங்கையை உள்ளடக்கிய பஹ்ரைன் தற்போது அதிலிருந்து நீக்கியுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 16 நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பஹ்ரைனில் தொழில் அனுமதியை பெற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.