பெண்ணொருவருக்கு தகாத புகைப்படங்களை அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணொருவருக்கு தகாத புகைப்படங்களை அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!

பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வந்த நபர் ஒருவர் கஹவத்தை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசிக்கு அவருடைய அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவதாகக் கூறி குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, 40 வயதுடைய திருமணமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் பல பெண்களுக்கு தன்னுடைய அந்தரங்க படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

இவர் சிம் கார்டுகளை வாங்குவதற்காக பல நபர்களின் தேசிய அடையாள அட்டையின் படங்களையும் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சந்தேகநபரிடம் இருந்து 107 சிம்கார்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.