நாட்டில் ரைஸ் குக்கரில் கறி சமைக்கும் நிலை! வைரலாகும் புகைப்படங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் ரைஸ் குக்கரில் கறி சமைக்கும் நிலை! வைரலாகும் புகைப்படங்கள்!


நாட்டில் தற்போது பாரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாழும் மக்கள் இதனால் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.


அண்மைக்காலமாக நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிவுவதால், மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிவாயு விற்பனை நிலையங்களிலும் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.


அத்தோடு ஒருபக்கம் சடுதியாக அதிகரிக்கும் விலை உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, எரிவாயு தட்டுப்பாட்டினால் மின் அடுப்பு மற்றும் மண்ணெண்ணை அடுப்பு என்பவற்றுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இவ்வாறான நிலையில் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் ரைஸ் குக்கர் மூலம் சோறு சமைப்பது, கறி சமைப்பது, பால் காய்ச்சுவது என அனைத்து சமையல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கூறப்படுகின்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.