நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல சேவைகளுக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பல சேவைகளுக்கு அனுமதி!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க இன்று (24) முதல் அனுமதி வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இதன்படி, திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சினிமா அரங்குகள் மற்றும் முகாமைத்துவம் செய்து நடத்தும் நிகழ்வுகளை வழமை போன்று நடத்த இன்று முதல் அனுமதி வழங்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், திறக்கப்படும் பகுதிகள் எந்த எல்லைக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரசதலைவருடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் இல்லையெனில் இது தொடர்பாக மீண்டும் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

கொவிட் அனர்த்தத்தின் போது நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு நீண்ட கால திட்டமொன்றை மேற்கொள்ளுமாறும், இலாபத்திற்காக குறுகிய கால வேலைத்திட்டங்களை நாடாமல் இருக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.