தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்த தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை திருத்த தீர்மானம்!


ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.


இக்குழுவின் கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தலைமையில் நேற்று (09) இடம்பெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.


அதேபோன்று, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (திருத்த) சட்டமூலத்துக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.


இந்தச் சட்டமூலங்கள் ஊடாக தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.


விசேடமாக, இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை.


பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது ஊழியர்களுக்கும் தொழில் வழங்குநருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே அமையும்.


இந்த சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாம் வாசிப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.