கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவத்துக்குறிய பேராசிரியர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரரை இன்று (16) நாரஹேன்பிட்டி அபேயராம விஹாரையில் வைத்து தேசிய ஒற்றுமைக்கான சர்வமத கூட்டமைப்பின் சம-தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செயத் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விகாரையின் விஹாராதிபதி கௌரவ கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரரும் கலந்துகொண்டார்.