தலதா மாளிகை வளாகத்தில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தலதா மாளிகை வளாகத்தில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட பங்களாதேஷ் நபர் கைது!


பங்களாதேஷ் பிரஜை ஒருவர் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு புனித தலதா மாளிகை வளாகத்தை வீடியோ செய்தார் என சந்தேகத்தின் பேரில் கண்டி தலதா மாளிகை பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இன்று (05) காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சந்தேக நபர், தான் நடத்தும் யூடியூப் சேனலுக்கு உரிய காட்சிகளைப் பெற்றதாக பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.


தலதா மாளிகைக்கு சொந்தமான அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமெராக்களை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் ட்ரோன் கமெரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி, கமெரா மற்றும் சந்தேகநபரின் கடவுச்சீட்டை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.டபிள்யூ.இத்தமல்கொட தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.