கொலை செய்யப்பட்ட மொஹமட் இர்ஷாட்! வௌியான அதிர்ச்சித் தகவல்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொலை செய்யப்பட்ட மொஹமட் இர்ஷாட்! வௌியான அதிர்ச்சித் தகவல்கள்!


கடந்த 26 ஆம் திகதி அதிகாலை வனவாசல பொசொன்வத்த பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


புதுக்கடையை சேர்ந்த மொஹமட் இர்ஷாட் என்ற 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


பணப் பிரச்சினை காரணமாக நண்பர்கள் சிலர் அவரை கடத்திச் சென்று கிரேன்பாஸ் பிரதேசத்தில் வைத்து தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அவரை கொலை செய்து வனவாசல பொசொன்வத்த பிரதேசத்திற்கு மோட்டார் வாகனம் ஒன்றில் கொண்டு சென்ற சந்தேகநபர்கள் சடலத்தை அங்கு வீசி விட்டு சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேலியகொடை குற்றப் பிரிவு மற்றும் களனி குற்றப் பிரிவு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சிசிரிவி காட்சிகள் சிலவற்றை பொலிஸார் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ளனர்.


-தெரண



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.