கொழும்பு 07 ரீட் மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றில் இன்று (20) அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த கட்டிடத்திலுள்ள தனியார் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவொன்றே இந்த வெடிப்புக்கான காரணம் என அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு சிலிண்டரோ அல்லது வேறு வெடிப் பொருட்களோ வெடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)