நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டில் 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றதாகவும், தற்போது 2020ஆம் ஆண்டில் 143,061 ஆகக் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அதிகளவான திருமண பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் 14,617 பதிவுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)