மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம - குருநாகல் பகுதி நவம்பர் 28 ஆம் திகதி பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நான்கு பாதைகளை கொண்ட 40 கிலோமீற்றர் நீளமான இந்த வீதியில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்காபிட்டிய ஆகிய இடங்களில் ஐந்து பரிமாற்றங்கழுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் 2017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)