அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து ஒளி சமிக்ஞை அமைப்பு இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அனைத்து முக்கிய சந்திகளையும் விரிவுபடுத்தும் வகையில் புதிய அமைப்பு நிறுவப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிரி கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி தொடர்பில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய தீர்மானங்களை நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மேலும் அறிவித்தார்.
பின்வருவன எடுக்கப்பட்ட ஐந்து (05) முக்கிய முடிவுகள்:
கொழும்பில் உள்ள அனைத்து முக்கிய சந்திகளையும் விரிவுபடுத்தும் வகையில் புதிய அமைப்பு நிறுவப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிரி கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீதி அபிவிருத்தி தொடர்பில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய தீர்மானங்களை நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் மேலும் அறிவித்தார்.
பின்வருவன எடுக்கப்பட்ட ஐந்து (05) முக்கிய முடிவுகள்:
- கொழும்பில் பிரதான வீதிச் சந்திகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள்
- சமீபத்திய தொழில்நுட்பத்துடன் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு அமைப்புகளை நிறுவுதல்
- கொழும்பு - புத்தளம் வீதியை விரைவில் அபிவிருத்தி செய்தல்
- முறையான ஒருங்கிணைப்பு மூலம் விரயத்தை குறைக்க திட்டமிடல்
- அடுத்த 09 மாதங்களுக்குள் கிண்ணியா குருஞ்சங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தல்
(யாழ் நியூஸ்)