யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பிரதேத்தில் ஆறு நபர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ்ப்பாண சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பிரதேத்தில் ஆறு நபர்கள் கைது!

ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவை தாக்கி கடுமையாக காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராஜகிரியவில் வைத்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி யாழ்ப்பாணம், தர்மபுரம், பிரமந்தர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை முறியடிப்பதற்காக வந்த தர்மபுரம் பொலிஸ் நிலைய அதிகாரிகளை சந்தேகநபர்கள் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள், இராஜகிரிய பிரதேசத்தில் நிர்மாணப்பணிகள் ஒன்றில் பணிபுரிந்த போதே சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.