கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் மோல்னிபிராவீர் (Molnupiravir) என்ற வில்லைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.