ரஞ்சனை விடுவித்தால் அவருக்கு எனது ஆசனத்தை துறக்க தயார்! -ஹரின்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஞ்சனை விடுவித்தால் அவருக்கு எனது ஆசனத்தை துறக்க தயார்! -ஹரின்


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால் அவருக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தை தியாகம் செய்ய பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (09) முன்வந்துள்ளார்.


ரஞ்சனுக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக தான் பதவி விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


மேலும் அடுத்த தேர்தலில் தாம் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.


தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அங்குனுகியோலபெலஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டார்.


பாராளுமன்றத்தில்  எதிர்க்கட்சிகள் பல தடவைகள் ஆட்சேபனைகளை முன்வைத்த போதிலும், ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் காரணமாக இரத்து செய்யப்பட்டது.


பின்னர் பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.