நாட்டில் போதைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இயங்கிவரும் போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, போதைப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள முடியாதுள்ளதாக ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)