நாட்டில் போதைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் போதைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் போதைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

நாட்டில் இயங்கிவரும் போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, போதைப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையினால் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ள முடியாதுள்ளதாக ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.