மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களை போக்குவரத்து பொலிஸார் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்றினை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு வழிவகுத்த சம்பவம் தொடர்பில் இன்னும் ஏதும் தெரியவில்லை.
"மட்டக்களப்பில் பொலிஸ் அராஜகம் தொடர்கிறது மற்றும் இந்த விடயம் அமைச்சர் சரத் வீரசேகரவின் காதுகளுக்கு செல்ல வேண்டும்" என தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பி டிவீட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
UPDATE:
குறித்த நபரை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரி இடையில் மறித்து இரண்டு நபர்களில் ஒருவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.