VIDEO: நெல்லிற்கான அதிகபட்ச உத்தரவாத விலை ரூ. 150 ஆக உயர்த்த திட்டம் - ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நெல்லிற்கான அதிகபட்ச உத்தரவாத விலை ரூ. 150 ஆக உயர்த்த திட்டம் - ஜனாதிபதி

இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் விவசாயத்தில் ஈடுபடும் உலகின் ஒரே நாடாக இலங்கையை உலகுக்கு அறிமுகப்படுத்தினால் அதுவே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்த பொருட்களுக்கு ஒரு நல்ல சந்தையை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்று 50 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்க முடியும் எனவும் அதுவே தனது நோக்கமாகும் எனவும் அதனை இலக்காகக் கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உடுபத்தாவ புன்னெஹெபொல கரிம உர செயலாக்க மையம் மற்றும் கரிம பண்ணைகளை நேற்று ஆய்வு செய்த போது அவர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.