PHOTOS: “ராஜபக்ச இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி “- ஸ்கொட்லாந்தில் அதிர்ச்சி மின்னொளி பரப்புரைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: “ராஜபக்ச இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி “- ஸ்கொட்லாந்தில் அதிர்ச்சி மின்னொளி பரப்புரைகள்!


ஸ்கொட்லன்டில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று பாரிய கண்டனப்போராட்டத்தை நடத்தவுள்ள நிலையில் அதற்குரிய முன்னோடி பரப்புரைகள் அடுத்தடுத்து வித்தியாசமாக நடத்தப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கியமாக கட்டிடங்களில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராகவும் மின்னொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இலங்கை அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஸ்கொட்லண்டை தளமாககொண்டு வெளிவரும் முக்கிய பத்திரிகைகளில் தமிழ்மக்கள் மீது இனப்படுகொலை செய்த போர் குற்றவாளி ஒருவர் ஸகொட்லாந்து வருவதான அடிப்படையில் ஆக்கங்கள் வெளிவந்திருந்தன.

இந்த நிலையில் நேற்றிரவு முதல் ஸ்கொட்லாந்தில் உள்ள முக்கியமாக கட்டிடங்களில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்துக்கும் எதிராகவும் 'சீரொளி' மூலம் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரித்தானிய தமிழ்மக்களின் இந்த நகர்வுகள் லண்டனில் சிறிலங்கா தூதரகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் கிளாஸ்கோ ஒன்றுகூடலை தடுக்கும் வகையில் தற்போது லண்டனில் தங்கியுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசும், லண்டனில் உள்ள இலங்கை தூதரகமும் கடும் பிரயத்தனங்களை எடுத்துவரும் நிலையில் இந்த மின்னொளி பரப்புரைகள் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான முன்னோட்டப்பரப்புரைகளால் உற்சாகம் அடைந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் எதிர்வரும் திங்களன்று அதிகளவில் கிளாஸ்கோ நகரில் ஒன்று கூடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் தற்போது தங்கியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு ஆதரவான ஒரிரு தமிழ் அமைப்புக்களுடன் இரகசிய தொடர்பாடலை நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. 

ஐபிசி தமிழ்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.