PHOTOS: நாட்டில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பை விநோதமாக வெளிப்படுத்திய அரசியம் பிரமுகர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: நாட்டில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பை விநோதமாக வெளிப்படுத்திய அரசியம் பிரமுகர்!

கரைச்சி பிரதேச சபை அமர்வின்போது நாட்டில் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா கலந்து கொண்டுள்ளார்.

விலை அதிகரித்து மக்களிற்குச் சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்குக் கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.

இதன் போது, மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக அரசாங்கத்தினை சபையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதன் போது பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது எனப் பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.