கரைச்சி பிரதேச சபை அமர்வின்போது நாட்டில் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா கலந்து கொண்டுள்ளார்.
விலை அதிகரித்து மக்களிற்குச் சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்குக் கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.
இதன் போது, மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக அரசாங்கத்தினை சபையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதன் போது பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது எனப் பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விலை அதிகரித்து மக்களிற்குச் சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்குக் கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை இன்று வெளியிட்டுள்ளார்.
இதன் போது, மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக அரசாங்கத்தினை சபையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதன் போது பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது எனப் பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.