சுப்பர் 12 சுற்றில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது லஹிரு குமார மற்றும் லிடன் தாஸ் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வார்த்தைப் பரிமாற்றம் தொடர்பிலான தீர்மானத்தை சர்வதேச கிரிக்கட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளது.
ஐசிசி விதிகளை மீறியதற்காக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டி ஒன்றிற்கான தொகையில் இருந்து லஹிரு குமாரவுக்கு 25 வீதமும், லிடன் தாஸுக்கு 15 வீதமும் அபராதம் விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)
ஐசிசி விதிகளை மீறியதற்காக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டி ஒன்றிற்கான தொகையில் இருந்து லஹிரு குமாரவுக்கு 25 வீதமும், லிடன் தாஸுக்கு 15 வீதமும் அபராதம் விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)