ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஹட்டன் அன்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கடந்த இன்று (25) பாடசாலையின் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை அழைத்து கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
சுமார் சாதாரண தரம் பயிலும் 40 மாணவர்கள் மற்றும் உயர்தரம் பயிலும் 15 மாணவர்களை அதிபர் பாடசாலைக்கு வரவழைத்து கற்பித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக 119 அவசர எண்ணிற்கு கிடைத்த புகாரை அடுத்து, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று அதிபரை எச்சரித்து சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து பாடசாலை அதிபர் திரு.ராதாகிருஷ்ணனிடம் நாம் வினவிய போது, பாடசாலையின் உயர் தரம் மாணவர்களை பாடசாலைக்கு வரவழைத்து தடுப்பூசி குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்ததாக, ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சாதாரண தர மாணவர்களினால் அழைத்து அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வருகை தந்த மாணவர்களுக்கு தனது பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
சுமார் சாதாரண தரம் பயிலும் 40 மாணவர்கள் மற்றும் உயர்தரம் பயிலும் 15 மாணவர்களை அதிபர் பாடசாலைக்கு வரவழைத்து கற்பித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக 119 அவசர எண்ணிற்கு கிடைத்த புகாரை அடுத்து, ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று அதிபரை எச்சரித்து சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களை தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து பாடசாலை அதிபர் திரு.ராதாகிருஷ்ணனிடம் நாம் வினவிய போது, பாடசாலையின் உயர் தரம் மாணவர்களை பாடசாலைக்கு வரவழைத்து தடுப்பூசி குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்ததாக, ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சாதாரண தர மாணவர்களினால் அழைத்து அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வருகை தந்த மாணவர்களுக்கு தனது பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)