ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு வீடமைப்புத் திட்டத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த ATM இயந்திரத்தை உடைக்க முற்பட்ட இருவரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கூரிய ஆயுதம் ஒன்றின் உதவியுடன் இருவரும் ATM இயந்திரத்தை உடைக்க முற்பட்டது சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட நபர்களால் ATM இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
கூரிய ஆயுதம் ஒன்றின் உதவியுடன் இருவரும் ATM இயந்திரத்தை உடைக்க முற்பட்டது சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனால், சம்பந்தப்பட்ட நபர்களால் ATM இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)