இந்த சந்திப்பு நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு திருமதி அலினாவின் ஆதரவை ஜனாதிபதி பாராட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி மற்றும் கோவிட் ஒழிப்பு துறையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து தூதுவர் திருப்தி தெரிவித்ததுடன், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கடமைகளை இலகுபடுத்துவதற்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். (யாழ் நியூஸ்)