இலங்கையில் கொரோனா வைரசின் மற்றொரு அலையைத் தடுப்பதற்காக 04 அம்ச முன்மொழிவை இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) முன்வைத்துள்ளது.
ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அண்மைக்காலமாக சடுதியாக இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து, நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை வியாபிக்கும் என்பதை நிரூபிப்பதாக சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இப்போது நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக சங்கம் சுட்டிக்காட்டியது.
இலங்கையில் கொரோனா வைரஸின் மற்றொரு அலையைத் தடுப்பதற்காக SLMA வழங்கிய 04 முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு.
ஐக்கிய இராச்சியம் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அண்மைக்காலமாக சடுதியாக இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து, நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை வியாபிக்கும் என்பதை நிரூபிப்பதாக சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இப்போது நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை பரவும் அபாயம் இருப்பதாக சங்கம் சுட்டிக்காட்டியது.
இலங்கையில் கொரோனா வைரஸின் மற்றொரு அலையைத் தடுப்பதற்காக SLMA வழங்கிய 04 முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு.
- கண்காணிப்பு மூலம் தற்போதைய ஒழுங்குமுறையை மேலும் கடுமையாக அமுல்படுத்தல்.
- நாட்டின் முன்னுரிமை வழங்கப்பட்டவர்களுக்கு கொரோனா மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் வழங்குதல்.
- தொற்று அதிகளவில் பரவக்கூடிய நிலைமைகள் மற்றும் நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளை தொடர்ந்து செயல்படுத்தல்.
- பரிசோதனைகள் மூலம் உயர் மட்ட கண்காணிப்புகளை மேற்கொள்ளல்.
(யாழ் நியூஸ்)