தடுப்பூசி போடப்பட்டதற்கான தகுந்த சான்றுகளுடன் இலங்கையில் இருந்து தகுதியான பயணிகள், நவம்பர் முதல் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) பயணம் செய்வதற்கான முழு தடுப்பூசி விதிகளின் கீழ் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஒன்றினை முழுமையாக போடப்பட்டவர்கள், வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை நிரூபிக்க வேண்டும் என இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரித்தானிய உயர் பொது அதிகாரியின் முழு அறிக்கையை கீழே காணலாம். (யாழ் நியூஸ்)