இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலக்கல் டுபாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - துபாயில் நடைபெறும் சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சியில் குறித்த நட்சத்திர நீலக்கல் காட்சிப்படுத்தப்பட உள்ளமைக்காகவே அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி, கிணறு தோன்றிக் கொண்டிருந்தபோது இந்த நட்சத்திர நீலக்கல் கண்டு பிடிக்கப்பட்டது.
சுமார் 510 கிலோ கிராம் எடையுடைய இக்கல் 100 மில்லியன் டொலர் பெறுமதியுடையது என்று கணிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-எம்.மனோசித்ரா