கம்பளை வைத்தியசாலையில் உள்ள நீர் தாங்கி ஒன்றில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (29) காலை நீரில் துர்நாற்றம் வீசுவதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து நீர்த்தாங்கியை பரிசோதித்ததில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.