வெல்லவாய பகுதியில் அமைந்துள்ள எல்லவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற தந்தையும் அவரது பிள்ளைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 38 வயதான தந்தை, அவரது 15 வயது மகன் மற்றும் 11 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.